715 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு! 105 நிறுவனங்களை சிக்கவைத்த பெரும் நிதி மோசடி - சிக்கலில் ரணில்

CID - Sri Lanka Police Ranil Wickremesinghe Dollars Arrest
By Shadhu Shanker Jul 22, 2026 11:30 AM GMT
Report

2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்குக் கிட்டிய பணம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர  குமார திஸாநாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த காலப்பகுதியும் இதில் அடங்குவதால், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தரப்பு உட்பட பலரும் கோரிக்கை விடுத்தனர்.

பிரதமர் மோடி பதவி விலகக் கோரி போராட்டம்! கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி விடுதலை

பிரதமர் மோடி பதவி விலகக் கோரி போராட்டம்! கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி விடுதலை

105 நிறுவனங்கள்

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ. 214.7 பில்லியன்) வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மிகப்பெரிய நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்றத்தின் பொதுநிதி தொடர்பான குழுவுக்கு (CoPF) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட குழுவில் வெளியிட்டார்.

715 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு! 105 நிறுவனங்களை சிக்கவைத்த பெரும் நிதி மோசடி - சிக்கலில் ரணில் | 715 Million Us Dollars Illegally Smuggled Ranil

அவரின் விளக்கத்தின்படி, 2025 ஜனவரி 20, பெப்ரவரி 23 மற்றும் மார்ச் 6 ஆகிய திகதிகளில், இலங்கை சுங்கத் திணைக்களம் மூன்று அறிக்கைகளை பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பித்திருந்தது.

வெளிநாடுகளுக்கு இறக்குமதிக்காக பணம் அனுப்பப்பட்ட போதிலும், அதற்கான பொருட்கள் நாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என்பதே அந்த அறிக்கைகளின் மையக் குற்றச்சாட்டாகும்.

முதல் அறிக்கையில் 89 நிறுவனங்கள், இரண்டாவது அறிக்கையில் மேலும் 4 நிறுவனங்கள், மூன்றாவது அறிக்கையில் மேலும் 12 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன.

இதன்படி, மொத்தம் 105 நிறுவனங்கள் இந்த சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளில் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளன. விசாரணைகளின் அடிப்படையில், 2023 ஜனவரி 1 முதல் 2026 மார்ச் வரை, இந்த 105 நிறுவனங்கள் டெலிகிராபிக் பணப் பரிமாற்றங்கள் (Telegraphic Transfers - TT) மூலம் சுமார் ரூ.214.7 பில்லியன் (அமெரிக்க டொலர் 715 மில்லியன்) வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளன.

பொலிஸாரின் மேசையில் இருந்த மது போத்தல் - காணொளியால் எழுந்த சர்ச்சை

பொலிஸாரின் மேசையில் இருந்த மது போத்தல் - காணொளியால் எழுந்த சர்ச்சை

227 வங்கிக் கணக்குகள்

ஆனால், அந்தப் பணத்திற்கு ஈடான எந்தப் பொருட்களும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுங்கத் திணைக்களத்தின் அறிக்கைகளைத் தொடர்ந்து, CID-யின் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு (FCID) இந்த பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளது.

விசாரணைகளின் போது, 105 நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் நிறுவனச் செயலாளர்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், மொத்தம் 55 நபர்களே அந்த அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

715 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு! 105 நிறுவனங்களை சிக்கவைத்த பெரும் நிதி மோசடி - சிக்கலில் ரணில் | 715 Million Us Dollars Illegally Smuggled Ranil

மேலும், இந்தப் பரிவர்த்தனைகளுக்காக 227 வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் சுமார் 24,300 டெலிகிராபிக் பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 13 முக்கிய வங்கிகள், தற்போது விசாரணைக்குட்பட்டுள்ள இந்தப் பரிவர்த்தனைகளை செயல்படுத்தியுள்ளதாகவும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

விசாரணைகள் முன்னேறிய நிலையில், இந்த மோசடி வலையமைப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள மகிந்தவின் புதல்வர்கள்

மீண்டும் மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள மகிந்தவின் புதல்வர்கள்

 முக்கிய போதைப்பொருள் கடத்தல்

கைது செய்யப்பட்ட நபர் 43 நிறுவனங்களின் உரிமையாளராக பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் மட்டும் ஆய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலரை டெலிகிராபிக் பணப் பரிமாற்றங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

CID-யின் குற்றச்சாட்டுப்படி, குறித்த நபர் இலங்கையில் உள்ள தரகர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, அவர்கள் வழங்கிய போலியான ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

715 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு! 105 நிறுவனங்களை சிக்கவைத்த பெரும் நிதி மோசடி - சிக்கலில் ரணில் | 715 Million Us Dollars Illegally Smuggled Ranil

தரகர்கள் பயன்படுத்திய அலுவலகங்களில் இருந்த கணினிகளிலேயே போலி விலைப்பட்டியல் (Invoices) தயாரிக்கப்பட்டு, அவை வங்கிகளுக்கு ஆதார ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்டதாகவும் விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்தப் பரிவர்த்தனைகளில் சில வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் விசாரணைகளில் எழுந்துள்ளதாக அசங்க கரவிட்ட தெரிவித்தார்.

விசாரணைகளின் போது, இந்த நிதி மோசடிக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு இருப்பதற்கான தகவல்களும் வெளியாகியுள்ளன. குறிப்பாக, துபாயில் இருந்து இயங்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் பணம், இதே முறையைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக CID தெரிவித்துள்ளது.

முக்கிய சந்தேகநபர்

துபாயை மையமாகக் கொண்டிருந்த மூன்று முக்கிய சந்தேகநபர்களில் இருவர், இன்டர்போல் (Interpol) உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், போதைப்பொருள் வியாபாரிகளின் பணம் துபாயில் உள்ள மற்றொரு நபர் மூலம் இயக்கப்பட்டதாகவும், இலங்கையில் தரகர்கள் வசூலித்த பணம் இறுதியில் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாகவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.

715 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு! 105 நிறுவனங்களை சிக்கவைத்த பெரும் நிதி மோசடி - சிக்கலில் ரணில் | 715 Million Us Dollars Illegally Smuggled Ranil

இந்த நடவடிக்கையின் மையத்தில் இருந்ததாகக் கூறப்படும் நபர், வசூலிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை கமிஷனாக வைத்துக்கொண்டு, மீதியை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பணத்தின் மூலாதாரம் குறித்து அவருக்கு முழுமையான அறிவு இருந்ததா என்பது தொடர்பிலும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

மேலும், அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஏராளமான போலி சுங்க ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக CID தெரிவித்துள்ளது.

விரிவான விசாரணை

இதற்கிடையில், களனி பொலிஸ் பிரிவில் சோதனையிடப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து ரூ.30 மில்லியன் பணம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் தனி விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்தப் பணம், இதேபோன்ற பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மற்றொரு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

715 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு! 105 நிறுவனங்களை சிக்கவைத்த பெரும் நிதி மோசடி - சிக்கலில் ரணில் | 715 Million Us Dollars Illegally Smuggled Ranil

அந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், அந்த நிறுவனம் மட்டும் ஒரு அரச வங்கி மற்றும் இரண்டு தனியார் வங்கிகள் ஊடாக சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலரை இதே முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வழக்குகளிலும், CID-யின் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் குற்ற வருவாய் விசாரணைப் பிரிவு (Proceeds of Crime Investigation Division) இணைந்து விரிவான விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

you may like this video

   

மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US