மட்டக்களப்பில் கடந்த மாதம் மாத்திரம் 700 மாடுகள் நோயினால் இறந்துள்ளன - கால்நடை பண்ணையாளர்கள் (Photo)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நோய் தாக்கம் காரணமாக 700க்கும் அதிகமான மாடுகள் இறந்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கால்நடைகள் இறப்பது குறித்து நேற்று (01.11.2022) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து மாவட்ட உதவி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
கால்நடை வளர்ப்பு மற்றும் கமநல அமைப்பு
மட்டக்களப்பு சர்வமத பேரவை மற்றும் மயிலத்தமடு, மாதவனை கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த சந்திப்பினை மேற்கொண்டது.
மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரனை சந்தித்த குழுவினர் அண்மைக்காலமாக கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் திடீரென இறப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மயிலத்தமடு,மாதவனை கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பின் தலைவர் எஸ்.நிமலன், மட்டக்களப்பு சர்வமத பேரவை தலைவர் த.மனோகரன் உட்பட கால்நடை பண்ணையாளர்கள், சர்வமத பேரவையின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அத்துடன் இவ்வாறு கால்நடைகள் உயிரிழக்கும்போது அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையென பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
700 மாடுகளின் இறப்பினை தடுத்திருக்கலாம்
கடந்த 09 தினங்களுக்குள் 200மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் ஏற்கனவே இதற்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தால் மாடுகள் இறப்பதை தவிர்த்திருக்கமுடியும் எனவும் மயிலத்தமடு,மாதவனை கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பின் தலைவர் எஸ்.நிமலன் தெரிவித்தார்.
அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இது தொடர்பில்
உடல்கூறுகளைப்பெற்றுச்சென்று ஒன்பது தினங்களை கடந்துள்ள நிலையிலும் இதுவரையில்
அது தொடர்பில் முறையான நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் நேற்றை தினம்
மாடுகளுக்கு தொண்டையடைப்பான நோய் என மருந்துவழங்குவதாகவும் இதனை முன்பே
செய்திருந்தால் 700மாடுகளின் இறப்பினை தடுத்திருக்கமுடியும் எனவும் கால்நடை
பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சில மருந்துகள் தனியார் நிலையங்களில் கொள்வனவு செய்யுமாறு பணிக்கப்பட்ட நிலையில் அதிக விலைகள் கொடுத்து அந்த மருந்துகளை பெற்று மாடுகளுக்கு வழங்கியபோதும் அவை பலனளிக்கவில்லையெனவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
மக்களின் கோரிக்கை
வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு மட்டுமே காப்புறுதி செய்யப்படுவதாகவும் மேய்ச்சல் தரைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு காப்புறுதி செய்யப்படாத காரணத்தினால் இழப்பீடுகளைப்பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊடாக கால்நடைக்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதுடன் உயிரிழந்த மாடுகளுக்கான நஷ்டயீடுகளைப் பெற்றுத்தர நடடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
ஒரு மாடு சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியானதாகவும் சுமார் 700 மாடுகள் இறந்த காரணத்தினால் கால்நடை வளர்ப்பாளர்கள் பாரிய நஷடத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மனு ஒன்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.





ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
