டித்வா சூறாவளி நிவாரண நிதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
டித்வா சூறாவளிக்காக புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதம் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எஞ்சிய நிவாரணத் தொகைகளை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
செலவு
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தினால் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையான கால பகுதியில் 86.7 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும், அதில் 26.4 பில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட 1.05 பில்லியன் ரூபாயில், 190 மில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

அவசர நிவாரணப் பணி
எவ்வாறாயினும், அவசர நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 7.6 பில்லியன் ரூபாயில் 85 சதவீதமான நிதி ஏற்கனவே பயனாளிகளைச் சென்றடைந்துள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும், உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாகச் சீரமைக்கவும் எஞ்சியுள்ள நிதியைத் தாமதமின்றி வழங்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட ஷிரான் பாஸிக் தொடர்பில் திடுக்கிடும் தகவல் : பொலிஸார் விடுத்துள்ள தகவல்கள்