ஒரே நாளில் பல லட்சங்களை இழந்த இலங்கை!
ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டத்தினால் 70 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகளின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் ஒரே நாளில் புகையிரத திணைக்களத்திற்கு 70 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பயணிகளையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி இவ்வாறு திடீர் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுப்பது எந்த வகையிலும் நியாயமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொழிற்சங்கப் போராட்டம் குறித்து ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் எந்தவிதமான முன் அறிவித்தலையும் வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
போராட்டம் முன்னெடுப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னரே இது குறித்து அறிவிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam