வவுனியாவில் 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணிய மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று (08.05) இரவு வெளியாகிய பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளிலேயே இப்புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில், செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த குருக்கள் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 5 பேருக்கும், பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 2 பேருக்கும் என 7 பேர் மேலும் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான 7 பேரையும் கோவிட் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள சுகாதார பிரிவினர், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.