கிளிநொச்சி சேவை சந்தையில் 7 பேருக்கு தொற்று உறுதி
கிளிநொச்சி சேவை சந்தையில் நேற்றும், இன்றும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 317 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் 05 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை இன்றைய தினம் 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 05 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் சேவை சந்தையினை திறந்து விடுவது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினர் சுகாதார தரப்புடன் பேசி வருகின்றனர்.
சேவை சந்தையில் சேவை பெறுவோர் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு சுகாதார தரப்பினர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தொற்றுக்குள்ளானவர்கள் சேவை சந்தையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.