கிளிநொச்சி மாவட்டத்தில் 69 ஆயிரத்து 704 பேர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு தகுதி
கிளிநொச்சி மாவட்டத்தில் 69 ஆயிரத்து 704 பேர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதி உடையவர்களாகக் காணப்படுகின்றனர் என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையிலேயே கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் 1174 பேருக்கு இது வரைக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் 69 ஆயிரத்து 504 பேர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய தகுதி உடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள்
450 பேருக்கு தடுப்பூசிகளுக்கான தேவைப்பாடுகள் இருப்பதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.