தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய கைதானவர்களின் எண்ணிக்கை உயர்வு
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 670 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 649 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நேற்றுமுன்தினம் தனிமைப்படுத்தல் சட்டதிவிமுறைகளை மீறி மேல் மாகாணத்துக்குள் உட்பிரவேசிக்க மற்றும் வெளியேற முற்பட்ட 184 வாகனங்களில் வந்த 238 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்துக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் நேற்றுமுன்தினம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது 1414 வாகனங்களில் வந்த 2 ஆயிரத்து 41 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri