சிஐடி என கூறி பெண் ஒருவரை கட்டிவைத்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது (Video)
மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஐடி என கூறி வீடு ஒன்றில் நுழைந்த கொள்ளையர்கள் ஆண் ஒருவரை கட்டிவைத்துவிட்டு அவரின் மனைவியின் காதில் இருந்த தோடு மற்றும் தங்க சங்கிலி உட்பட 2 அரை பவுண் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்ற 6 பேரை இன்று (12) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பி.எஸ்.பி பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களிடமிருந்த கார் ஒன்று மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய கோடரி ,கத்தி 3 கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ம் திகதி வெல்லாவெளி பிரதேசத்தில் சிஐடி என தெரிவித்து கொள்ளையர்கள் பெண் ஒருவரின் காதில் இருந்த தோடு மற்றும் தங்க சங்கிலி உட்பட 2 அரை பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இதில் சந்தேகத்தில் இருவரை கைது செய்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் அவர்கள் வழங்கிய தகவலுடன் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பி பண்டார தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான இன்று (12) ஓட்டுமாவடி, கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள வட்டவான் மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.
இதில் 31,34,29,31 வயதுடையவர்கள் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல் காரணமாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த போது 4 பேரும் நண்பர்களாகி சிறையில் இருந்து வெளியில் வந்ததும் கொள்ளையடிப்பதற்காகன திட்டங்களை தீட்டியுள்ளனர்.
வாடகைக்கு கார் ஒன்றை எடுத்துக் கொண்டு கடந்த 5ம் திகதி வெல்லாவெளி பிரதேசத்தில் குறித்த வீட்டினுள் பொலிஸ் சிஐடி என தெரிவித்து உள் நுழைந்து குறித்த பெண்ணின் கணவனின் கைகளை பின்பக்கமாக கட்டிவைத்துவிட்டு பெண்ணின் காதில் இருந்த தோடு மற்றும் கழுத்தில் இருந்த தங்கசங்கலி உட்பட 2 அரை பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து தப்பி ஓடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கொள்ளையடித்த தங்க ஆபரணங்களை பினாஸ்கம்பனி ஒன்றில் ஒரு இலச்சத்து 91 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்து அந்த பணத்தை பங்கு கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
