ஹோமாகம இரசாயன தொழிற்சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை -செய்திகளின் தொகுப்பு
ஹோமாகம – கட்டுவன பிரதேசத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கை இன்று (19.08.2023) மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய தொழிற்சாலையை கண்காணிப்பதற்காக குழுவொன்று அங்கு செல்லவுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கிய குறித்த
தொழிற்சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல்
அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரன தெரிவித்தார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 15 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri