வவுனியா நகர்ப்பகுதியில் 55 கொரோனா தொற்றாளர்கள்
வவுனியா நகர்ப் பகுதியில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பட்டாணிச்சூரில் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர்ப் பகுதியில் நேற்றுமுன் தினம் திடீரென பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நகர்ப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள், அங்கு பணியாற்றுவோர் மற்றும் பட்டாணிச்சூர் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறி வர்த்தக நிலையத்தினை திறந்தவர்கள் என 204 பேருக்கு இதன்போது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இன்று அவர்களுக்கான முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் அதில் 55 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா நகரை மீண்டும் முடக்கி அங்குள்ளவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.