கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிந்து கிடக்கும் பொதிகள் - கடும் அதிருப்தியில் மக்கள்
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த ஏராளமான கடிதங்கள் மற்றும் பார்சல்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 5000 கிலோகிராம் கடிதங்கள், பார்சல்கள் மற்றும் ஆவணங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சரக்குப் பகுதியில் தேங்கி கிடப்படதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
நேற்று மூன்றாவது நாளாக தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
பெருந்தொகையான கடிதங்கள்
மேலும், ரயில் நிலையங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் பெருந்தொகையான கடிதங்கள், பார்சல்கள் மற்றும் பொருட்கள் தேங்கி கிடப்பதாகவும், அவை இன்னும் எண்ணப்படவில்லை எனவும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக, தபால் அலுவலகங்களில் பொது சேவை நடவடிக்கைகள் மற்றும் அனைத்து கடித விநியோக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தபால் ஊழியர்கள்
நேற்று தபால் சேவைகளை பெற வந்த பொதுமக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் வீடு திரும்ப வேண்டியிருந்தது.
தபால் ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போனதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையில், தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.பி.சி. நிரோஷனா, அஞ்சல் ஊழியர்களால் தொடங்கப்பட்ட தொடர்ச்சியான வேலைநிறுத்தம் தொடரும் என தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
