500 கோடி ரூபா நட்டஈடு : இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு உத்தரவு
கொச்சி டஸ்கர்ஸ் கேரளாவின் ஐபிஎல் உரிமையை நிறுத்தியதன் காரணமாக ஏற்பட்ட நிதியிழப்புக்கு நட்டஈட்டை வழங்கவேண்டும் என்று இந்திய கிரிக்கட்கட்டுப்பாட்டு சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொச்சி கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ரெண்டெஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் ஆகிய நிறுவனங்களுக்கு, இந்த கணிசமான இழப்பீட்டை வழங்குமாறு, மும்பை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி
நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை குறித்த இரண்டு நிறுவனங்களுக்கும், 386 கோடி ரூபாய் மற்றும் 153 கோடி ரூபாய்களை செலுத்த வேண்டும்.
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி 2011 இல் இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒரு ஒரு பதிப்பில் மட்டுமே பங்கேற்றது.
எனினும் அந்த ஆண்டின் பிற்பகுதியில், ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அதிகாரிகள், அதன் ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
