இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்பிச் சென்ற மூவர் கைது!

Sri Lanka India Crime
By Erimalai Jun 28, 2025 01:33 PM GMT
Report

இலங்கையில் பல்வேறு குற்றப் பின்னணி உள்ள சிங்களர்கள் இருவர் உட்பட மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் உள்நுழைய முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை நேற்று(27) தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காவது மணல் திட்டில் வைத்து இந்திய கடலோர காவல் படை வீரர் கைது செய்து மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்ற பின்னணி கொண்ட நபர்கள் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்று வருகின்றனர்.

விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் குறித்து இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்

விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் குறித்து இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்

கைது

சட்டவிரோத ஊடுருவலை கண்காணித்து தடுக்கும் நடவடிக்கையில் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கையைச் சேர்ந்த குற்ற பின்னணி உள்ள சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ இருப்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்பிச் சென்ற மூவர் கைது! | 5 Sri Lankans Arrested By India

இதனையடுத்து, நேற்று நள்ளிரவில் இருந்து தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காம் மணல் திட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற மூன்று பேரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து கொடுப்பனவு அட்டை, கடன் அட்டை மற்றும் இலங்கை பணம் 46,000 உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. 

இதனையடுத்து, மூவரையும் கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து சென்று மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதன்போது, முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இலங்கை தமிழர் கபிலன் (34), நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த சுமித் ரோலன் பெர்னாண்டோ (43), மாதவிலக்கை சாகர குணதிலக (33) ஆகிய இரண்டு சிங்களர் என மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலி. வடக்கு பிரதேசசபை முதல் அமர்வில் கருத்து தெரிவித்த தவிசாளர்

வலி. வடக்கு பிரதேசசபை முதல் அமர்வில் கருத்து தெரிவித்த தவிசாளர்

குற்ற பின்னணி

குறித்த நபர்கள் சட்டவிரோதமான முறையில் இரவு 9 மணிக்கு மன்னார் மாவட்டம் பேச்சாளையிலிருந்து படகு மூலம் தலா 2 லட்சம் செலுத்தி நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் தனுஷ்கோடி அடுத்த நான்காம் மணல் திட்டத்தில் வந்து இறக்கியதாகவும், தமிழகத்திற்குள் ஊடுருவி பின் இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்பிச் சென்ற மூவர் கைது! | 5 Sri Lankans Arrested By India

மேலும் இலங்கை தமிழர் கபிலன் ஐஸ் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது பிணையில் இருப்பதாகவும், சிங்களர்கள் இருவர் மீதும் குற்றப் பின்னணி மற்றும் நிழல் உலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உடன் தொடர்பில் இருந்து வரும் நிலையில் இலங்கையில் “கிளீன் ஸ்ரீலங்கா” என்ற திட்டத்தின் கீழ் கொலை கொள்ளை மற்றும் போதை பொருள் வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கைது செய்து கடுமையான தண்டனை விதித்து வருவதால் இலங்கையில் உள்ள குற்ற பின்னணி மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதாக இலங்கை பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற குற்ற பின்னணி உள்ள மூவர் நான்காம் மணல் திட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிகழ்வு கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே குற்றப் பின்னணி உள்ள இமானுவேல் முஸ்ஹப் மற்றும் அஜித்தன் ஆகிய இருவர் கடல் வழியாக கடந்த சனிக்கிழமை படகில் புறப்பட்டு தமிழகம் வர இருந்த நிலையில் இருவரையும் இலங்கை கடற்படை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

வெலிகமை நகரசபை உறுப்பினர்கள் கடத்தல் விவகாரம்! விசாரணைகள் தீவிரம்

வெலிகமை நகரசபை உறுப்பினர்கள் கடத்தல் விவகாரம்! விசாரணைகள் தீவிரம்

வெலிகமை நகரசபை உறுப்பினர்கள் கடத்தல் விவகாரம்! விசாரணைகள் தீவிரம்

வெலிகமை நகரசபை உறுப்பினர்கள் கடத்தல் விவகாரம்! விசாரணைகள் தீவிரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US