இலங்கை கடற்தொழிலாளர்கள் 5 பேர் மியன்மாரில் தடுத்து வைப்பு - செய்திகளின் தொகுப்பு (video)
திருகோணமலை கடற்தொழில் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 5 கடற்தொழிலாளர்கள் மியன்மாரின் யாங்கூன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி திருகோணமலை கடற்தொழில் துறைமுகத்திலிருந்து குறித்த கடற்தொழிலாளர்கள் தொழிலுக்கு சென்றுள்ளனர்.
அந்த குழுவினர் திக்வெல்ல, வெலிகம மற்றும் திருகோணமலை பகுதிகளில் வசிப்பவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,