பிறந்து 5 நாட்களேயான குழந்தைக்கு கோவிட் தொற்று
முல்லைத்தீவு - மஞ்சோலை வைத்தியசாலையில் பிறந்து 5 நாட்களேயான பெண் குழந்தையொன்றுக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவின் படி 15 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினரின் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 4 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றுள் பிறந்து 5 நாட்களேயான பெண் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கோவிட் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டவர்களை
சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரப்பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.