யாழில் நான்காவது நாளாக தொடரும் விமானப்படையின் வான் சாகச கண்காட்சி
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இலங்கை விமானப்படையின் 73ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் 2024” கண்காட்சி நிகழ்வுகள் இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த 06ஆம் திகதி ஆரம்பமாகிய கண்காட்சி நாளை வரை காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை இடம்பெறவுள்ளது.
இன்றைய நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
பங்கேற்க வாய்ப்பு
இதன்போது பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டதுடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர் ஒருவர் கொழும்பில் நடைபெறவுள்ள விமான துறைசார் நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு கோரியுள்ளார்.

இந்நிலையில், விபரங்களை தருமாறும் பரிசீலிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளதோடு மாணவனுக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி... என்ன தெரியுமா? Cineulagam