ஐந்து வருடங்களுக்குள் பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த 49 பேர் மரணம்
கடந்த 2020ம் ஆண்டு தொடக்கம் 2025 வரையான காலப்பகுதிக்குள் பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த 49 பேர் மரணித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
49மரணங்கள்
பொலிஸ் தடுப்புக்காவலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் பொலிசாருடன் அநாவசிய மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் தவிர்த்துக் கொள்வது குறித்து பொதுமக்களைத் தெளிவூட்டும் வகையில் குறித்த நிகழ்வை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

அதன் போது வெளியிடப்பட்ட தகவல்களின் பிரகாரம் கடந்த ஐந்து வருடங்களுக்குள் பொலிஸ் தடுப்புக் காவலில் 49மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அதே போன்று பொலிசாருடனான மோதல்கள் காரணமாக மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதைத் தடுக்க தேவையான வழிகாட்டல்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri