இலங்கையில் 4 நாட்களில் 48 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி வீடுகளில் மரணம்
இலங்கையில் புத்தாண்டு கொவிட் கொத்தணி உருவாகி ஒன்றரை மாதங்களான நிலையில் வீடுகளில் ஏற்படும் மரணய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 4 நாட்களில் 48 பேர் வீடுகளில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுகாதார பணிப்பாளரினால் உறுதி செய்யப்பட்டு அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் கொவிட் அறிக்கையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.
இந்த மரணங்கள் இடம் பெற்ற 4 நாட்களும் இலங்கையில் தினசரி பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை 40 வரை அதிகரித்துள்ளது. குறித்த 4 நாட்களில் மொத்தமான 176 மரணங்கள் பதிவாகிய நிலையில் அதில் 48 பேர் வீடுகளில் உயிரிழந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
குறித்த 176 பேரில் அதிகமானோர் கடுமையான கொவிட் தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலைமை காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri