நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக 45 மனுக்கள் தாக்கல்!
இலங்கையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் 11 மனுக்கள் உயர்நீதிமன்றத்துக்கு கிடைக்கபெற்றுள்ளன என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
அதற்கமைய, நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக இதுவரை 45 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
45 மனுக்கள்
இதேவேளை, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது என்று சட்டமா அதிபர் நேற்று உயர்நீதிமன்றத்துக்கு அறியப்படுத்தியுள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பான திருத்தங்கள் நாடாளுமன்றக் குழுநிலை கூட்டத்தின்போது முன்வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
