கிளிநொச்சி மாவட்டத்தில் விபத்துக்களால் 42 மரணங்கள் இவ்வாண்டு பதிவு
கிளிநொச்சி மாவட்டத்தில் விபத்துக்களால் 42 மரணங்கள் இவ்வாண்டு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் வேகக் கட்டுப்பாட்டைக் கடுமையாக்க மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் இன்று ஆராயப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் விபத்துக்களால் 42 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளது.
வீதியில் பயணித்துக்கொண்டிருப்பவர்கள் சடுதியாக திரும்புதல் மற்றும், வீதி நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்காமையால் இவ்வாறு விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும், சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும்பொழுது வீதியைக் கடக்க முற்படுவது தொடர்பில் கடுமையாக அவதானம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொலிஸார் முன்வைத்துள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி நகரில் விபத்துக்கள் இடம்பெறுவது குறைவாகக் காணப்படுவதாகவும், நகரிற்கு அப்பால் உள்ள கரடிபோக்கு தொடக்கம் பளை வரையான பகுதியிலும், 155ம் கட்டை தொடக்கம் இரணைமடு சந்தி வரையிலும் விபத்துக்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.
இலங்கை முழுவதும் 70 கிலோ மீட்டர் வேகத்துக்குட்பட்டதாகவே வீதிகள் காணப்படுவதாகவும், அதனை மீறிப் பயணிப்பதாலேயே அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இதன்போது தெரிவித்தனர்.
பேருந்து சாரதிகள் அதிக வேகத்தில் பயணித்தவாறு வெற்றிலையைப் பயன்படுத்துதல் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் அதிகம் காணப்படுவதாகவும், பயணிகள் பாதுகாப்பு தொடர்பில் கவனத்தில் கொள்வதில்லை எனவும் கருத்து முன்வைக்கப்பட்டது.
இதற்கு ஒரே தீர்வாக வீதி போக்குவரத்தில் வேகக் கட்டுப்பாட்டை விதிப்பதே
பொருத்தமானது என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam