இலங்கையில் நாளாந்தம் 4 மடங்காக அதிகரிக்கும் தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக அகில இலங்கை ஆபரண வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
தங்கத்தின் விலை உயர்வால் வழக்கத்தை விட வர்த்தகம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக சங்கத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் தங்கத்தின் விலை நான்கு மடங்கு அதிகரிக்கிறது. அதற்கமைய, நாளொன்றுக்கு 5,000 ரூபாய் அதிகரிப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கத்தின் விலை அதிகரிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் டொலர்களுக்கு பதிலாக தங்கத்தை கொண்டுவரும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயரும் நிலை காணப்படுவதாகவும், நுகர்வோர் இந்த விலை உயர்வை தாங்கிக் கொள்ள முடியாது எனவும் நகை வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.

புன்னகை பூவே தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் இன்னொரு சன் டிவி சீரியல்... ரசிகர்கள் வருத்தம் Cineulagam
