இலங்கையில் 400 இந்து ஆலயங்கள் உடைப்பு! இந்தியப் பிரதமருக்குப் பறந்த அவரசக் கடிதம்
இலங்கையில் சுமார் 400 வரையிலான இந்து ஆலயங்கள் சிறிலங்கா படையினரால் உடைக்கப்பட்டுள்ளதாக ஜோர்ஜ் பெர்ணான்டஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
George Fenandas Foundation என்ற அமைப்பின் தலைவர்களும், இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுமான திரு. அருண் நாயக் மற்றும் திரு. உத்தம் காண்டே போன்றவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய அவசரக் கடிதத்தலேயே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
இலங்கையில் சுமார் 10,000 வரையிலான தமிழ் பெண்களை சிறிலங்கா படையினர் பாலியல் வல்லுறவு புரிந்துள்ளதாகவும் ஜோர்ஜ் பெர்ணான்டஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா படையினரால் 3 இலட்சம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 98ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளதாகவும், 400 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர்கள், இந்தியப் பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்கள்.