காணாமல் போன 4 கடற்றொழிலாளர்கள் - தேடும் பணியை தீவிரப்படுத்திய அமைச்சர்
பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(27.05.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி இரவு சுமார் 11 மணியளவில் இரண்டு படகுகளில் கடலுக்கு சென்ற குறித்த கடற்றொழிலாளர்கள் இதுவரை கரைக்கு திரும்பாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சிவாஜிலிங்கம்
அந்தப் பகுதியில் நேற்று முதல் கடுமையான காற்று வீசிவருவதால், அவர்கள் பயணித்த படகுகள் கரைக்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் பணிகளில் பிரதேச கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சரின் பணிப்புரை
இந்த நிலை தொடர்பாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் கவனத்திற்கு தகவல் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அமைச்சர் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகமிடம் தொடர்பு கொண்டு தேடுதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், இன்று(29) அதிகாலை விமானப்படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தியும் கடற்பரப்பில் விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், அண்டை நாடுகளின் கடற் பாதுகாப்பு பிரிவுகளுக்கும் காணாமல் போன மீனவர்கள் தொடர்பான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச மட்டத்திலும் தேடுதல் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
காணாமல் போன கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என கடற்படையினருக்கும், சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அமைச்சர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri