யாழில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!
யாழில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(11) இடம்பெற்றுள்ளது.
நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியை சேர்ந்த கவிநாத் பூஜிதா என்ற தம்பதிகளின் முதல் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
உயரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது.
இவ்வாறு பிறந்த குழந்தை நேற்றுமுன்தினம் திடீரென உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
