கணவனை காப்பாற்ற போராடிய இளம் மனைவி, மகள் உட்பட நான்கு பேர் பலி - சுற்றுலாவின் போது நேர்ந்த துயரம்
பொலன்னறுவையில் ஏரி ஒன்றில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, அவர்களின் மகள் மற்றும் இன்னுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
திம்புலாகலவில் உள்ள எல்லே ஏரியில் குளிக்கச் சென்ற நான்கு பேர் நேற்று காலை நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.
நால்வர் பலி
கொழும்பின் புறநகர் பகுதியான இரத்மலானையில் இருந்து பொலன்னறுவையிலுள்ள அவர்களின் உறவினர் வீட்டுக்கு சுற்றுலா சென்ற நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 30 வயதான மேனகா தர்ஷினி, 27 வயதான தாரக டி சில்வா, 25 வயதான திலோகம திலகரட்ன, 13 வயதான லிஹினி பத்திரிகா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அதிகாரிகள் குழு
திலோகம திலகரத்ன என்பவர் ஏரியில் நீந்தச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற மூன்று பெண்களும் ஏரியில் குதித்ததாகவும், இதனாலேயே அவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

வெறும் 10 வருடங்களில் முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய 42 வயது நபர் News Lankasri
