மட்டக்களப்பு மரப்பாலம் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்த 4 பேரை கைது செய்ததுடன், 4 உழவு இயந்திரங்களை மணலுடன் மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி கே.பி. பண்டார தெரிவித்துள்ளார்.
இக்கைது இன்று செவ்வாய்க்கிழமை (15) காலையில் இடம்பெற்றுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கா வின் ஆலோசனைக்கமைய சட்டவிரோத மணல் அகழ்வினை தடுப்பதற்காக அதில் ஈடுபடுவோரைக் கைது செய்யும் விசேட நடவடிக்கையை ஒன்று மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி கே.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று அதிகாலை மரப்பாலம் ஆற்றுப் பகுதியினை சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது சட்டவிரோதமாக ஆற்றிலிருந்து உழவு இயந்திரத்தில் மண் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 பேரைக் கைது செய்ததுடன், 4 உழவு இயந்திரங்களை மணலுடன் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும்
இவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்துள்ளார்.


