ஊடகவியலாளர் வின்சன் புளோரின்ஸ் ஜோசபின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல்
ஊடகவியலாளரும் மொழி பெயர்ப்பாளருமான ஜோசப் ஐயா என அழைக்கப்படும் வின்சன் புளோரின்ஸ் ஜோசப் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வானது யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (27.06.2024) இடம்பெற்றுள்ளது.
மலர் தூபி அஞ்சலி
இதன்போது, ஜோசப் ஐயாவின் திருவுருவ படத்திற்கு அவரது துணைவியார் மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து ஈகைச் சுடரானது குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன் ஏற்றி வைத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைப்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டதுடன் மலர் தூபி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.