சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 13 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் பாதிப்பு
சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 13 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
இன்று மாலை 4 மணிவரை சேகரிக்கப்பட்ட தகவலிற்கு அமைவாக கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுகளில் சீரற்ற வானிலையால் 13 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 7 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 19 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ச்சியான வெள்ள அபாயம் காணப்படும் நிலையில் மக்கள் அவதானமாக செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் கிராம சேவையாளர், படையினர் மற்றும் பொலிசாரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இடர் ஏற்படுமிடத்து 021 4927 544 எனும் அவசர அழைப்புக்கு தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
