ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் நினைவேந்தல் நிகழ்வு(Photos)
தமிழர் பகுதிகளில் தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்ட வருகின்றன என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நினைவேந்தல் நிகழ்வானது யாழ்.கோண்டாவில் அன்னங்கை பகுதியில் இன்று காலை (06.05.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சிறி சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தலில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் எம்.பி. ரெலோவின் பேச்சாளர் கு.சுரேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சபா.குகதாஸ், விந்தன் கனகரட்ணம், பிரசன்னா இந்திரகுமார் வலிகிழக்கு முன்னாள் தவிசாளர் தி.நிரோஷ் உள்ளிட்ட ரெலோவின் உறுப்பினர்கள், மூத்த போராளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மன்னார்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ரெலோ தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மன்னாரிலும் அனுஷ்டிகப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வானது மன்னார் ரெலோ காரியாலயத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எ.ரி.மோகன் ராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ்,கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதுடன் தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், நினைவுப் பேரூரையும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.








உள்ளூராட்சி தேர்தலும் தமிழ் அரசியலுக்கு தேவையான கூட்டு முன்னணித் தத்துவமும் 17 நிமிடங்கள் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
