37 மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட விஷம்: மீண்டும் ஈரானில் கொடூரம் - செய்திகளின் தொகுப்பு
ஈரானில் விஷம் கொடுக்கப்பட்ட 37 பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே அமைந்துள்ள அந்த நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே பாடசாலையை சேர்ந்த 18 மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் கோம் நகரை சுற்றியுள்ள 10 பெண்கள் பாடசாலைகளில், மாணவிகள் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது புரியாத புதிராகவே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,