ஜனவரிக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 350 மில்.டொலர் அவசியம்: 150 மில். டொலர் மட்டுமே கையிருப்பில்
எதிர்வரும் நாட்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக சுமார் 200 மில்லியன் டொலர்கள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பற்றாக்குறையாக இருக்கும் பணத்தை உடனடியாக வழங்குமாறு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் நாட்டின் பயன்பாட்டுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 350 மில்லியன் டொலர்கள் அவசியம். தற்போது பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் 150 மில்லியன் டொலர்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது.
இதனால், ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய பற்றாக்குறையாக இருக்கும் 200 மில்லியன் டொலர்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளேன்.
அடுத்த 10 நாட்களுக்கு தேவையான எரிபொருள் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் இருக்கின்றது.
எவ்வாறாயினும் பற்றாக்குறையாக இருக்கும் தொகையை அமைச்சரவை வழங்கும் என நம்புகிறேன் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் சிங்கள வானொலி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அமைச்சர் கம்மன்பில, ஜனவரி மாத நடுப்பகுதியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri