34ஆம் வீரமக்கள் தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு (Photos)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 34வது வீரமக்கள் தின அனுஷ்டிப்பு நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்த அனுஷ்டிப்பு இன்று (16.07.2023) கோயில்குளத்தில் அமைந்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் நினைவிடத்தில் இடம்பெற்றுள்ளது.
அமைப்பின் உபதலைவர் ராகவனால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மறைந்த தலைவர் உமாமகேஸ்வரனின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தாத்தனால் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் க. சிவநேசன் தலைமையில் இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.















நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





என்னது மயில் கர்ப்பமாக இல்லையா, சரவணன் எடுத்த முடிவு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கூலி படத்திற்காக நாகர்ஜுனா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
