34 வருடங்களின் பின்னர் நேரடி வழிபாடுகளில் ஈடுபடவுள்ளன வலிகாமம் மக்கள்
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களில் சுமார் 34 வருடங்களின் பின்னர் பொதுமக்கள் நேரடியாக வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.
இதற்கமைவாக இன்று (23) வழிபாடுகளை மேற்கொள்ள 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பித்துள்ளனர்.
காலை 9 மணி முதல் பலாலி இராணுவ தலைமையகத்தின் பிரதான நுழைவாயில் ஊடாக ஆலயத்தினை தரிசிப்பதற்கு வருகை தரும் பக்தர்கள் இராணுவத்தினரின் பேரூந்து மூலம் ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் வருகை தருகின்ற பக்தர்கள் குறித்த நுழைவாயிலுக்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புனர்நிர்மாணம்
இதேவேளை இலத்திரனியல் உபகரணங்கள்,தொலைபேசிகள் என்பன இராணுவத்தினரால் பெறப்பட்டு இலக்கமிடபட்டு இலக்கமொன்று வழங்கப்படும். வழிபாடுகளின் பின்னர் மீள வெளியே வருகின்ற பொழுது குறித்த உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் காணி விடுவிப்பு தொடர்பாக பேசப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி யாழ் மாவட்ட செயலர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், மாவட்ட செயலக அதிகாரிகள், தெல்லிப்பழை பிரதேச செயலர் , யாழ் மாவட்ட இராணுவ தளபதி ஆகியோருக்கிடையில் பலாலி இராணுவ தலைமை அலுவலகத்தில் தலைமையகத்தில் கூட்டம் இடம்பெற்றது.
மேலும் வழிபாட்டு தலங்களை புனர்நிர்மாணம் அல்லது புனரமைப்பு பணிகள் செய்வதற்கு அனுமதிகள் வழங்கப்படவில்லை என இராணுவம் குறிப்பிட்டுள்ள போதிலும் ஆலயத்தினர் விரும்பினால் முறையான கோரிக்கையினை மாவட்ட செயலகத்திடம் முன் வைப்பதன் மூலம் இராணவத்தினர் மூலம் ஆலயங்களை புனர்நிர்மாணம் செய்யமுடியும் என யாழ் மாவட்ட செயலர் அம்பலவானர் சிவபாலசுந்தரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 34 நிமிடங்கள் முன்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
