சட்டவிரோதமாக தங்கியிருந்த 34 பங்களாதேஷ் பிரஜைகள் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த 34 பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீசா காலம் பூர்த்தியனதன் பின்னர் நாட்டில் தங்கியிருந்த பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் பங்களாதேஷ் பிரஜைகளை கைது செய்துள்ளனர்.

சீதுவ பிரதேசத்தின் தங்குமிடமொன்றில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 1
9 முதல் 54 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பங்களாதேஷ் பிரஜைகள் வெலிசர தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri