ஆப்கான் மசூதியில் குண்டு வெடிப்பு! 32 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் இன்று(15) மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 32 பேர் வரை பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் உள்ள ஷியா இனத்தவர்களின் மசூதியில் தொழுகையின் போது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது 32 பேர் வரை பலியாகியுள்ளதோடு 45 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கந்தஹாரில் உள்ள இமான் பர்கா மசூதியில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.
குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இது ஒரு தற்கொலை குண்டு தாக்குதலார இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.