இலங்கையில் கடந்த 7 நாட்களில் கோவிட் மரணங்களின் நிலை
ஜூன் மாதம் முதல் வாரத்தில் கடந்த 7 நாட்களில் மாத்திரம இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக 305 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மே மாதம் 31 ஆம் திகதி முடிவடையும் போது இலங்கையில் மொத்த கோவிட் மரணங்கள் ஆயிரத்து 484 ஆக இருந்ததுடன் அந்த எண்ணிக்கை ஜூன் 7 ஆம் திகதி முடிவடையும் போது ஆயிரத்து 789 ஆக அதிகரித்திருந்தது.
கடந்த வாரத்தில் மாத்திரம் இலங்கையில் 21 ஆயிரத்து 615 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் இலங்கை ஆசியாவில் 9வது இடத்தில் உள்ளதுடன் உலகில் 21 வது இடத்தில் உள்ளதாக வேல்ட் மீற்றர் இணையத்தளம் தெரிவித்துள்ளது.