சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேற தயாராகும் 300 அமைப்பாளர்கள்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 300 அமைப்பாளர்கள் குமார வெல்கமவுடன் இணைவதற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குமாரவெல்கம தலைமையில் புதிதாக பதிவு செய்யப்பட்ட புதிய லங்கா சுதந்திரக் கட்சியில் (நவலங்கா நிதாஸ் பக்சய) கட்சியின் தலைமைக்காரியாலயம் எதிர்வரும் மார்ச் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் திறக்கப்படவுள்ள நிலையில்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி குமார வெல்கமவுடன் இணைவதற்கு 300 அமைப்பாளர்கள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில், ரொரிண்டனில் உள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இல்லத்தில் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது குமாரவெல்கம தலைமையில் புதிதாக பதிவு செய்யப்பட்ட புதிய லங்கா சுதந்திரக் கட்சியில் (நவலங்கா நிதாஸ் பக்சய) முக்கிய பதவிகளில் அர்ஜுண மற்றும் சுசில் ஆகியோரை நியமிப்பதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது, அர்ஜுண ரணதுங்கவிற்கு பொருளாளர் அல்லது தேசிய அமைப்பாளர் பதவியை வழங்குமாறும், பொதுச்செயலாளர் பதவியில் சுசிலை அமர்த்துமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனினும், அவர்கள் இருவரும் உடனடியாக அப்பதவிகளைப் பெற்றுக்கொள்வதாக இணக்கம் வெளியிட்டிருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
மேலும், தமது கட்சியின் அமைப்பாளர்கள் யாரும் குமார வெல்கமவின் கட்சியில் இணைய முயற்சிகளை கொண்டிருக்கவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

அந்த பிரச்சனையால் 15 ஆண்டுகள் காத்திருந்து அவரை திருமணம் செய்தேன்... கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக் Cineulagam
