கோவிட் வைரஸிடமிருந்து தப்ப 3 வழிகள்! நாட்டு மக்களுக்கு அறிவிப்பு
இலங்கையில் கோவிட் வைரஸின் புதிய திரிபு வேகமாக பரவி வருவதால், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவிட் வைரஸ் தொற்றாமல் தப்பித்து கொள்வதற்கு பின்பற்ற வேண்டிய 3 வழிமுறைகளை இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது.
அதற்கயை அதிக மக்கள் கூடும் இடங்களில் நிற்பதனை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
ஒருவருக்கு ஒருவர் அருகில் இருந்து கதைத்தல், உணவு உட்கொள்ளுதல் போன்றவற்றை முற்றாக தவிர்க்க வேண்டும்.
நன்கு காற்றோட்டம் கிடைக்காத இடங்களில் நிற்பதனை தவிர்ப்பதன் ஊடாக கோவிட் பரவுவதனை நிறுத்த முடியும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.