ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இறுதி ஏல விற்பனைக்காக தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்கள்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை(SriLankan Airlines) தனியார்மயப்படுத்தும் திட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்த ஏலத்தாரர்கள் பட்டியலில் இருந்து மூன்று நிறுவனங்கள் தேர்வுக்காக இறுதிப்பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் ஏலத்துக்காக 6 நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களை செய்திருந்த நிலையில் ஏர் ஏசியா, சுப்ரீம் குளோபல் மற்றும் ஹேய்லீஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
பல்துறை நிறுவனம்
இதன்படி இலங்கையின் பொருளாதார நிலைப்படுத்தலுக்காக ஒத்துழைத்த இலங்கையரான ஆர்.எம் மணிவண்ணனின் தலைமையில் முன்னணி பல்துறை நிறுவனமான சுப்ரீம் கொன்சோடியம் இயங்குகிறது.
விமான போக்குவரத்துத்துறையில் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனமான ஏர்ஏசியா ஒரு மலேசியா நிறுவனமாகும்.
இந்நிலையில் தெரிவு செய்யப்பட்ட மற்றைய நிறுவனமான ஹெய்லீஸ் இலங்கையின் உள்ளூர் பல்துறை நிறுவனமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
