ஆளில்லா கமராவை அனுமதியின்றி பறக்கவிட்ட பெண் உட்பட மூவர் கைது
விக்டோரியா நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதியில் ஸ்ரோன் கமராவை பறக்கவிட்டு ஒளிப்பதிவு செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று காலை விக்டோரியா நீர்வீழ்ச்சி மற்றும் காலாட்படை பிரிவு முகாமுக்கு அண்மித்த பகுதியில் ஸ்ரோன் கமராவை பறக்கவிட்டு ஒளிப்பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தொல்தெனிய காவல்துறைக்கு இராணுவ அதிகாரிகள் அறிவித்ததை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொத்தடுவ மற்றும் களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர்கள் மூவரும் தொல்தெனிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
