தென்னிலங்கையில் சிக்கிய சொகுசு வாகனங்கள் - திருடப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
சட்டவிரோதமான முறையில் பாகங்களை இறக்குமதி செய்து ஒன்றிணைக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வாகனங்கள் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சட்டவிரோத வாகன தயாரிப்பு
இந்த சட்டவிரோத வாகன தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்கள் உடந்தையாக இருந்து உதவியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

கடவத்தை, கம்பஹா மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடவத்தை, மீகஹவத்த மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் இந்த வாகனங்கள் மீட்கப்பட்டன.
உடன் அறிவிக்கவும்
இவ்வாறு கைப்பற்றப்பட்டவற்றுள் சொகுசு கார்கள், ஜீப் வண்டிகள், வான்கள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அடங்குகின்றன.
இது தவிர, மேலும் 40 வாகனங்கள் இவ்வாறு சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தங்கள் வாகனங்கள் திருடப்பட்டிருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ, அது குறித்த தகவல்களை 0112 947780 என்ற இலக்கத்தின் ஊடாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
தீவிரமடையும் வான்வழி தாக்குதலினால் நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள் - அபுதாபியில் பற்றியெரியும் ஆலை