வாகரை பிரதேச காட்டுப் பகுதியில் சட்ட விரோத கசிப்பு: மூவர் கைது
மட்டக்களப்பு (Batticaloa) வாகரை பிரதேச காட்டுப் பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும், நேற்றையதினம் (11.05.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பினால் இவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவக்கைக்காக வாகரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இடம்
இவர்களிடமிருந்து 270 லீற்றர் கசிப்பும் 9 கோடா பரல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கதிரவெளி அம்பந்தனாவெளி களப்பு பிரதேசத்தில் வைத்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
