முல்லைத்தீவில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயம்
முல்லைத்தீவு(Mullaitivu) - மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த வாள்வெட்டு சம்பவம் இன்று(02.07.2024) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வாள்களுடன் இரண்டு வீடுகளுக்கு சென்ற குழுவினர் குறித்த வீட்டில் இருந்த இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு வாள் வெட்டில் படுகாயமடைந்த இருவரும் மல்லாவி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
