கிலோ கணக்கிலான போதைப்பொருட்களுடன் 2 லட்சம் பேர் கைது - இலங்கை பொலிஸாரின் அதிரடி
“Country Together” என்ற தேசிய நடவடிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து, நேற்று(25.06.2026) வரையிலான காலப்பகுதியில் இதுவரையில் 215,526 சோதனைகள் நடத்தப்பட்டு, 214,333 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பரவலாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில்,“Country Together” என்ற தேசிய நடவடிக்கை 2025 அக்டோபர் 30 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இலங்கை பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
பொலிஸ் தலைமை ஆய்வாளரின் அறிவுறுத்தல்களின்படி, செயல்படுத்தப்படும் இந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையானது, தீவு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுப்பது, போதைப்பொருளுக்கான தேவையைக் குறைப்பது மற்றும் போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்துவது உள்ளிட்ட பலமுனை அணுகுமுறைகளைச் செயல்படுத்தியுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், 3,112 நபர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மேலும் 360 சந்தேக நபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 2,188 போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்காகப் பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிலோ கணக்கிலான போதைப்பொருள் மீட்பு
இந்தச் சோதனைகளின் போது மீட்கப்பட்ட முக்கிய போதைப்பொருட்களின் அளவுகளையும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, 69,951 சோதனைகளில் 1,963 கிலோகிராம் மற்றும் 863 கிராம் ஹெராயினும், 82,594 சோதனைகளில் 2,119 கிலோகிராம் மற்றும் 629 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், 189 சோதனைகளில் 288 கிலோகிராம் மற்றும் 864 கிராம் கொக்கைனும், 47,905 சோதனைகளில் 5,817 கிலோகிராம் மற்றும் 714 கிராம் கஞ்சாவும், 12,899,201 கஞ்சா செடிகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளின் போது 479 கிலோகிராம் மற்றும் 246 கிராம் குஷ் போதைப்பொருளையும், 312 கிலோகிராம் மற்றும் 291 கிராம் ஹஷிஷ் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
வடகொரியாவின் அதிநவீன ஆயுதச் சோதனை - பதிலடி கொடுக்க 5 இலட்சம் ட்ரோன் போர்வீரர்களை உருவாக்கும் தென்கொரியா
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam