யாழ்.பூனைத்தொடுவாயில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29 ஆவது நினைவேந்தல் (video)
பூனைத்தொடுவாய் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை,படுகொலை செய்யப்பட்ட 10 பேரின் 29 ஆவது நினைவேந்தல் இன்று வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இடம்பெற்றுள்ளது.
1994 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்-வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பூனைத்தொடுவாய் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை கடலில் வைத்து 10 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
29 ஆவது நினைவேந்தல்

கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழக தலைவர் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில், சென்மேரிஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன் ஆழியவளை அருணோதயா விளையாட்டு கழகத்திற்கும், கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்திற்கும் இடையில் சினேகபூர்வ விளையாட்டும் இடம்பெற்றுள்ளது.
அருண் விஜய் முதல் சாய் அபயங்கார் வரை.. விஜய்யின் TVKவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நட்சத்திரங்கள் லிஸ்ட் Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam