29 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்பு
29 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் தடுப்பு விசேட பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்பில், 29 கிலோ ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
போதைப் பொருட்கள் மீட்பு
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 42 வயதான நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
திக்கவெல்ல, ஊருகமுவ பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட போதைப் பொருட்களின் சந்தைப் பெறுமதி சுமார் 400 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு, இதற்குப் பின்னணியில் செயல்படும் போதைப்பொருள் வலையமைப்பை கண்டறிய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam