வெளிநாடொன்றை நோக்கி பறந்த 28 போர் விமானங்கள்
தங்கள் நாட்டை நோக்கி சீனா செவ்வாய்க்கிழமை 28 போர் விமானங்களை அனுப்பியதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் சீனா அடிக்கடி போர் விமானங்களை அனுப்பிவரும் நிலையில் மிக அதிக எண்ணிக்கையிலான விமானங்களை முதல்முறையாக இப்போது அனுப்பியுள்ளது.
சீன விமானங்களை எதிர்கொள்ளும் வகையில், தைவானின் வான் பாதுகாப்பு மண்டலமாக கண்டறியப்பட்டுள்ள தென்மேற்குப் பகுதியில் அந்நாடு வான்வழி ரோந்து படையை தயாா் நிலையில் வைத்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,