டித்வா சூறாவளியின் தாக்கம் : அபாயகரமான நிலையில் கல் குவாரிகள்
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுப் பகுதிகளில் இயங்கும் 262 கல் குவாரிகளில் மீண்டும் புவியியல் ஆய்வை மேற்கொள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அபாய வலயங்களில் அமைந்துள்ள குவாரிகளில் இந்த முயற்சி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்க அனுமதி வழங்கும் நடைமுறை
மண்சரிவு அபாயம் இருப்பதாக அடையாளம் காணப்படும் குவாரிகளுக்கான சுரங்க உரிமங்கள் உடனடியாக இடைநிறுத்தப்படும் என்று பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

இதுவரை, மண்சரிவால் பாதிக்கப்பட்ட மாத்தளை மாவட்டத்தில் உள்ள இரண்டு குவாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் குவாரிகளில், 127 குவாரிகள் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், 135 குவாரிகள் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அமைந்துள்ளன.
எதிர்காலத்தில் சுரங்க அனுமதி வழங்கும் நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவதற்கும், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பரிந்துரைகளுக்குக் கட்டாயம் இணங்க வேண்டும் என்பதற்கும் பணியகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சுரங்கப் பகுதிகளில் மேலும் மண்சரிவு தொடர்பான ஆபத்துகளைத் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை மிக முக்கியமானது என்று வீரக்கோன் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்கள்... இதோ விவரம் Cineulagam
ஒரு பக்கம் சூட்டிங், அதே நேரத்தில் ICUவில் இறந்த கணவர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையின் சோக கதை Cineulagam