அசாதாரண காலநிலை காரணமாக யாழில் 26பேர் பாதிப்பு
இன்றையதினம் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 26பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/203 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5பேர் மின்னல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஜே/191 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7பேர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
பலத்த காற்று
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/141 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த ஏழுபேர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுளள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அத்துடன் ஜே/150 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மேலும், சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/180 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 23 மணி நேரம் முன்

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
